திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் அறிவுறைப்படி சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல் படியும்

 திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு மேற்பார்வையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மீராபாய் தலைமையில்

திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் எல்லைக்குட்பட்ட முக்குலத்தோர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது . குட்கா பான்மசாலா போன்ற போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200 பள்ளி மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *