திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (55), முருகேசன் (50). சிக்ககவுண்டர் கடந்தசில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். முருகேசன் மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு ஆறுமுகம், முருகேசனுக்கு இன்னும் முறையாக எழுதிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆறுமுகம் தாயிடம் அடிக்கடி தகராரில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது..

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த சொத்து தகராறில் ஆறுமுகம், தாய் பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த முருகேசனின் மகன் மருதுபாண்டி(27),அருகில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தில் சரமாரி வெட்டியுள்ளார். இதில் கழுத்து பாதி துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் துடிதுடித்து இறந்தார்.

எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப் பதிவு செய்து மருது பாண்டியை தேடி வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி பழனியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவருக்கு மணிகண்டன்(30) என்ற ஒரு மகன் இருப்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் (30), கண்ணன் (35) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சொத்து தகராறில் பெரியப்பாவை தம்பி மகன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *