திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அரசமர பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வதற்காக பெரிய குழாய்கள் போடப்பட்டிருந்தது. இந்த குழாயின் ஓரமாக பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென அந்த குழாய் தீ பிடித்து எரிந்துள்ளது இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மல மலவென பரவி ஐந்து அடிக்கு மேல் தீ எழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். அருகே வீடுகளும் கடைகளும் அமைந்திருந்தது, இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்ட காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் அரியமங்கலம் கோட்ட மண்டல தலைவர் ஜெய நிர்மலா திமுக பிரமுகர் அலெக்ஸ் ராஜா, அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *