தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் துணை இயக்குனர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து உழவர் சந்தையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும் மன்னச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உரம் மற்றும் பயிர்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பயனாளி ராஜமாணிக்கம் என்பவருக்கு இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் 3.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மினி டிராக்டரை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு தலைவர் ஸ்ரீதர்,

திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், ஆட்சியர் நேர்முக உதவியாளர் மல்லிகா, தோட்டக்கலை துணை இயக்குனர் விமலா, திருச்சி விற்பனை குழு செயலாளர் சுரேஷ்பாபு விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *