திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேருந்து சிறைப்பிடிப்பு சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் தவித்து வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *