திருச்சி மாநகரில், போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., என்ற லைசெர்கிஸ் ஆசிட் டைத்லாமைட், மைத்தாம்பிடமைன் போன்ற மாத்திரைகள் விற்கப்படுவதாக, மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, திருச்சி சிந்தாமணி பகுதியில், நேற்று, ஹரிஹரன்,23, என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., மற்றும் மைத்தாமபிடமைன் மாத்திரைகளை, வெளியூர்களில் இருந்து கூரியரில் வரவழைத்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, கோட்டை போலீசார் அவரை கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *