திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் கலில் வயது 52 இவர் காந்தி மார்க்கெட் அருகே லட்சுமி விலாஸ் எலுமிச்சை மண்டியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தனது சகோதரி வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் மீன் மார்க்கெட் அருகே திடீரென தனது மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இறந்தவரின் மகன் முகமது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *