திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெற்க்குப்பை கிராமத்தில் மைக்செட் கட்டும்போது உதவிக்கு சென்ற உரிமையாளரின் மகன் மின்சாரம் தாக்கியதில் இன்று பரிதாபமாக பலியானார்.

திருச்சி லால்குடி அருகே நெற்க்குப்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் 20 வயதான பகவத்.இவர் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தனியார் தொழிற் பயிற்சிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவருடைய தந்தை திருமணம் மற்றும் இல்ல விழாக்களுக்கு மைக்செட்,லைட், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இன்று அப்பகுதியில் உள்ள வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு மைக்செட் கட்டும் போது எதிர்பாராதவிதமாக பகவத் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக புதூர் உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *