தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.

இன்று 20.05.2021 ( வியாழன் கிழமை ) முதல் 30.05.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) வரை மொத்த மீன் வியாபாரம் காசி விளங்கி மார்க்கட்டில் செயல் படாது என்று திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கத்தினர் முடிவெடுத்து மீன் மார்க்கெட்டை மூடியுள்ளனர். மேலும் மொத்த வியாபரிகள் – வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய கூடாது எனவும் திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் முடிவு எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்