திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும் மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதகங்களை வென்று பல சாதனைகளை புரிந்து வரும் குத்து சண்டை விளையாட்டு வீரரும் பயற்ச்சியாளருமான எழில்மணி ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகாடமி திருச்சி காட்டுரில் உள்ள கைலாஷ் நகரில் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகாடமியை திறந்து வைத்து பேசுகையில் :-

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் பலர் விளையாட்டுகளில் கலந்து கொண்டு முயற்சி செய்து வருகின்றனர் குத்துச்சண்டை போன்ற தனிநபர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள் இளம்பெண்களுக்கு இந்த குத்துச்சண்டை பயிற்சி அகடமி மிகவும் பயன் தரும்

 திருச்சியில் முதல் முறையாக அதுவும் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்று முறையான பயிற்சி பெற்று தற்போது பயற்ச்சியாளராக இருந்து இந்த குத்துச்சண்டை பயற்சி மையத்தை தொடங்கி இருக்கும் அருமை தம்பி எழில் மணி இந்த பயிற்சி அகடமி பல்வேறு திறமையான குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகளை உறுவாக்கி பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று திருச்சிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை உள்ளது அவருக்கும் இந்த பயிற்சி மையம் தொடங்க உறுதுணையாக இருந்த அவரது தந்தை முருகன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

  இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்டா குஸ்தி, தவம்,விட்னஸ் ,சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல தமிழ் திரைப்பட நடிகை சுமதி கலந்து கொண்டு குத்துச்சண்டை பயற்சி வளையத்தை திறந்து வைத்து குத்துச்சண்டை பயற்சி பெற்று வரும் பெண்களுக்கு குத்துச்சண்டை கையுறைகள் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம் கலந்து கொண்டு உடற்பயிற்சி தளவாடங்களை இளைஞர்கள் இளம்பெண்கள் உடற்பயிற்சி செய்து பயன்படுத்த திறந்து வைத்தார். மேலும் இவ்விழாவில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர் நடராஜன் குத்து சண்டை பயிர்ச்சியாளர் செல்வகுமார் பயிற்ச்சியாளர் ரவிசந்திரன் பிஷப் கல்லூரி உடற்கல்வி பயிற்ச்சியாளர் பால்ராஜ் பி எச் எல் தொழிற்சங்க நிர்வாகி மிதுன் சக்கரவர்த்தி தீபன் ஸ்டீபன் பிரின்ஸ் சுரேஷ்இளம்பருதி ஜான் கென்னடி உள்ளிட்டோரும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *