ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணை வீட்டினுள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி ராஜா வயது 40 என்பவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளி ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்கில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது . மேலும் குற்றவாளி ராஜா தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதாலும் , அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குற்றவாளி ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *