திருச்சி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தின விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 99,999 மதிப்பீட்டில் பேட்டரிகள் இயங்கும் சிறப்பு நாற்காலி ஆறு நபர்களுக்கும்,10 மாற்றுத் திறனாளிகளுக்கு 10,400 மதிப்பெட்டில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கான சிறப்பு நாற்காலிகளும்,

3சிறப்பு பள்ளி பள்ளிகளுக்கு ரூபாய் 26 ஆயிரத்து 664 மதிப்பீட்டில் கூடிய மென்பொருளுடன் கூடிய அவாஸ் சிறிய வகை மடிகணினிகளும், மேலும், ரூபாய் 26 ஆயிரம் விதம் சிறு மற்றும் குறு தொழில் வங்கி கடன் மானியம் மற்றும் 10மாற்று திறனாளிகளுக்கு தல 3058திப்பெட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவி உட்பட 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 11 லட்சத்தி 33 ஆயிரத்து 166 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியான்டி, சௌந்தரபாண்டியன் ஸ்டாலின்குமார்,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ரமேஷ் உட்பட துறை அதிகாரிகள் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *