திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க மையம் கட்டிடத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூபாய் 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அருகில் மாவட்ட கலெக்டர் சிவராசு எம்எல்ஏக்கள் மற்றும் கிராப்பட்டி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.