திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த வசித்து வந்த வக்கீல் கோபி கண்ணனை அவரது மகள் கண் முன்னே நேற்று முன்தினம் கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்தனர். வாக்கில் கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர்.
மே 10-ம் தேதி 11, 12 ஆகிய மூன்று நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்வதும், மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.