திருச்சி வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமாரின் சகோதரி தேவ சங்கரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி கி ஆ பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் உடல் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது.

இதில் தேவ சங்கரி நினைவு உடல் உறுப்புதான விழிப்புணர்வு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃ திருச்சி ராக் டவுன் இணைந்து நடத்திய உடல் உறுப்பு தான நிகழ்வு இன்று நடந்தது. இதில் கராத்தே முத்துக்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கி ஆ பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், உடற்கூறியல் மருத்துவர் ஆனந்தி ஆகியோரிடம் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான படிவத்தை பூர்த்தி செய்து இன்று வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தேவ சங்கரி படத்திற்கு முன்பாக அஞ்சலி செலுத்தி உடல் உறுப்பு தானம் குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்