திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுல்தான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பீம நகரைச் சேர்ந்த மாரி கண்ணன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *