திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி பூங்கொடி இந்த தம்பதியினருக்கு ராஜேஸ்வரி வயது 20ல் மகள் உள்ளார். இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றவர். அதன்பின் வீடு திரும்பவில்லை. மகள் ராஜேஸ்வரியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாயமான இளம்பெண் ராஜேஸ்வரியை ஸ்ரீரங்கம் போலீசார் தேடி வருகின்றனர்.


திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி பாத்திமா வயது 37 இவர் திருமண மண்டபத்தில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாயமான பாத்திமாவை பாலக்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருச்சி மணிகண்டம் மட்டை பாறைப்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் விசித்திரா வயது 22 பட்டதாரியான இவர் விராலிமலையில் உள்ள தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெளியே சென்றவர் திரும்பவும் வீடு வந்து சேரவில்லை. இது குறித்த அவரது தந்தை கோபால் அளித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *