தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி முடிவடைகிறது.

தமிழகத்தில் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி இழுபறி மற்றும் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக இன்றுவரை முக்கிய கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை தொடர்ந்து பேச்சு வார்த்தை முடிவுற்ற நிலையில் திமுக வினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக முத்துசெல்வம் அறிவிக்கப்பட்டு உள்ளர் அவர் இன்று திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி இடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *