திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழா விழாவையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் கடந்த 5 நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது..

அதன் ஒரு பகுதியாக பரதநாட்டிய வித்யாலயா கலைமாமணி ரேவதி முத்துசாமி குழுவினரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும், காவேரி மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஹோலி கிராஸ் தன்னாட்சி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் நாட்டுப் பற்றினைப் போற்றிடும் பாடல்கள், பரத நாட்டியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 6-வது நாளான இன்று ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மற்றும் சீதாலெட்சுமி இராமசாமி கல்லூரி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *