திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில் “வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டி கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

 நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகையை பார்வையற்ற இசை கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுமை கட்டணத்தை விளக்கு அளிக்க வேண்டும். அரசுத்துறையால் நடத்தப்படும் தேர்வாணைய தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 மாற்று திறனாளிகளுக்கு என தொழில் கூட்டத்தை அரசு ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *