திருச்சி உறையூர் , பிராட்டியூர் மற்றும் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக் கட்டடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சிகளில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நியாயவிலைக் கடைக் கட்டடங்களைத் திறந்து வைத்து , குடும்ப அட்டைதார்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து , திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவில் மாநகராட்சி பொதுநிதியில் ரூபாய் 3.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் . பின்னர் , திருச்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து , மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

இந்நிகழ்வுகளில் , மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் , கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் விக்னேஷ்வர் , முன்னாள் துணை மேயர் அன்பழகன் , மாவட்டப் பிரமுகர் வைரமணி , திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *