திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார்.அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான விடுதி செயல்படுகிறது.அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம் ஜேம்ஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி அரசு மருத்துவமனை காவல் துறையினரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு விசாரணைக்கு பின் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் ஜேம்ஸை கைது செய்தனர்.

இதனிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *