திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என 4 பேர் சென்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அனைவரும் படுகாயமடைந்தனர்.

திருச்சி் கீழ சிந்தாமணி , வென்னீஸ் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (30) இவரது மனைவி மலர் (28) மகன் தர்ஷன்(8),மகள் தர்ஷினி(3). இவர்கள் 4 பேரும் கீழ சிந்தாமணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூர் அருகே நெ2 கரியமாணிக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்க்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிளியநல்லூர் திருச்சி சேலம் சாலையில் சென்றபோது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த்தில் மணிகண்டனுக்கு கால் முறிந்த்து.தாய் மற்றும் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தனர். இதில் 3 வயது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது.

தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு சிகிச்சைககாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தந்தையையும் 3 வயது குழந்தையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 3 வயது குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கால் முறிந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்