செப்டம்பர் 05-ம் தேதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை இந்திய முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி செம்பட்டு ஆபட் மார்சல் RC தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி பள்ளியில் பணியாற்றும் 60 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி நிர்வாகி ஆரோக்கியசாமி தலைமை வகித்தார் .நார் பர்ட் சபை தந்தை சந்தியாகு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட் அந்தோணி ராஜ்.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெலிக்ஸ் ஜெரோம் ஆனந்த் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி மாணவன் மகேஷ்வரன் , மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ஆசிரியை திருமதி ஜான்சிராணி ஏற்புரை வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்