எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் திருச்சி ஆர்த்தோ மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம்

 திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி, உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் தலைமை வகித்தனர்.

காவலர்களுக்கு டாக்டர் முகேஷ் மோகன் மற்றும் டாக்டர் ஸ்ரீதேவி பயிற்சியளித்தனர். இந்த பயிற்சியில் விபத்து நடந்த இடத்தில் உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக முதலுதவி தந்த எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும்,

இதேபோல் தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி மயக்கமடைந்தவர்களை எப்படி முதலுதவி தந்த காப்பாற்ற வேண்டும் என்றும்,

மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி தந்த எப்படி காப்பாற்ற வேண்டும் என்று காவலர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்