திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பங்களாதேஷ் மாநிலம், குல்னா பாகர் ஹாட், காலிஷ் காலனியை சேர்ந்தவர் பாலுப்சன் இவரது மகன் சௌரவ்சன் வயது 23. கடந்த மாதம் 4-ஆம் தேதி தான் கொரொனா விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். மேலும் கடந்த 29ம் தேதிதான் வகுப்பு தொடங்கியது. இந்தநிலையில் நேற்று மாலை அவருடன் பங்களாதேஷை சேர்ந்த சக மாணவர் அதே அறையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செளரவ்சன் நண்பர் கல்லூரி வகுப்புக்கு இரவு 7 மணிக்கு அறைக்கு திரும்பி பார்த்தபோது அறையின் கதவு உள் பக்கம் தாளிடப்பட்டிருந்ததாகவும் சௌரவ்சன் நண்பர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சௌரவ்சன் அறையின் மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் செளரவ்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அறையில் உள்ள கையில் எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சௌரவ் சன் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என் அறையின் சக மாணவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் என்ஐடி கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *