திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஆரம்ப நிலையிலேயே பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட அந்த ஓட்டலை இடிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி இருந்தனர்.

ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன், துணை தலைவர் மண்டல் தலைவர் ஆர் பி பாண்டியன், பொதுச்செயலாளர் பொன் தண்டபாணி,வடக்கு மண்டல் தலைவர் செந்தில் குமார் துணைத் தலைவர் கருணாம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனுவை அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது திருவெறும்பூர் மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலம் பாதையா அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்துக்கு மாநகராட்சி கட்டிட அனுமதி பெறப்படவில்லை மேலும் இது தொல்லியல் துறை சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாகும் ஆகவே சட்டத்திற்கு புறம்பாக திறக்கப்பட்டுள்ள அந்த அசைவ உணவகத்தை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்