திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, பயணி ஒருவர் தனது தொடை பகுதியில் (knee cap) நீ கேப் போன்று அணிந்து அதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

மேலும் அவரது உடமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலி ஒன்றையும் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பயணி எடுத்து வந்த மொத்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 257. அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 1 கிலோ 424 கிராம் என தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *