3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகரம் டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் இந்திய விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்பதற்காக டெல்லி சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்து பேரணியாக வந்தனர் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர் அந்தப் போராட்டத்தின்போது விவசாயி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *