உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காதை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை தீர்க்காததை கண்டித்தும், உர விலை உயர்வைதைப்போல் DPC-ல் நெல் விலை உயர்த்த கோரியும், மணப்பாறை பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததை கண்டித்தும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவல்துறையினர் விவசாயிகளை தாக்கி, வழுகட்டாயமாகவும் குண்டுகட்டாகவும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் துடையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் படுகாயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் திருச்சி KK நகர் மாநகர காவல்துறை சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *