திருச்சி சாலை ரோட்டில் உள்ள கும்பகோணம் ஐயங்கார் காபி கடையில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு கடையிலிருந்து சாலையை நோக்கி ஓடினர். இந்த தீ விபத்து குறித்து திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.இதுகுறித்து தில்லை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து குறிப்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *