பெரம்பலூர் மாவட்டம் தனியார் லாட்ஜில் உள்ள ‌அறையில் வாலிபர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்படி தனியார் லாட்ஜிக்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு முதல் உதவிக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில். திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் எஸ்பி தனிப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் சுரேஷ் வயது 32 என தெரியவந்தது மேலும் கல்லக்குடி பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் காதல் தோல்வியால் எலி விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *