கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தீமை பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.