திருச்சியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. திருச்சி மாநகரப் பகுதியில் மலைக்கோட்டை முழுவதுமாக பணியால் மூடப்பட்டு மூடப்பட்டது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகர பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது சாலைகளில் மழை போன்று பனி பொழிகிறது என்பது போல் பனி பொழிவு அதிகமாக இருந்தது.

இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக கண்களுக்கு தெரியவில்லை. சாலையும் பனி மூட்டத்தில் மூடிக்கிடப்பதால் சிறிது தூரத்தில் மட்டுமே சாலையும், வழியும் கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால் வாகனத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்க வேண்டி சென்றனர். திருச்சி பொன்மலை ரயில் நிலையம் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்