திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் விளையாட்டு கோட்டாவின் மூலம் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்வதற்கு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கபடிகுழு தேர்வு போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது.இப்போட்டியில் பங்கு பெறுவதற்காக தமிழகத்திலுள்ள திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், நாகை, திருவாரூர், சேலம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு வந்திருந்தனர்.‌

இவர்களுக்கு கல்லூரி விளையாட்டுத் கோட்டாவின் மூலம் கபடி குழு போட்டி நடத்தப்பட்டு இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான மாணவர் தேர்வு இன்று நடந்தது. தகுதி தேர்வில் பங்கு பெறும் மாணவர்கள் அவர்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,கபடி போட்டியில் மாநில மாவட்ட அளவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை கொண்டு வந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *