திருச்சி கொட்டப்பட்டு ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்ராசு 22 சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து தற்போது மனைவி புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சி பொன்மலைப்பட்டி பஸ்ஸ்டாப்பில் பஸ்சில் வந்து இறங்கி அருகே உள்ள வஉசி கடைவீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன் மறைந்திருந்த இரு வாலிபர்கள் வீச்சருவாள் கொண்டு சின்ராசுவின் கழுத்து மற்றும் முகத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்ததும் அந்த இரு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொன்மலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்திற்கு உடனடியாக குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு, பொன்மலை உதவி ஆணையர் காமராஜ் மற்றும் பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் நிக்சன் ஆகியோர் விரைந்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை நடந்த இடத்திற்கு வந்த உறவினர்கள் சின்ராசு உடலை பார்த்து கதறி அழுதனர். உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கொலை செய்த குற்றவாளிகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கொலை நடந்த சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து காந்திநகர் வரை ஓடி சென்று நின்று விட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *