திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் நாலாவது மாடியில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது.‌ இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கண்டோன்மெண்ட் கோர்ட் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரைக் கொண்டு பீச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர்.

மேலும் தீ அணையாமல் பற்றி எரிந்ததால் கண்டோன்மெண்ட் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் ஹோட்டல் 4-வது மாடியில் உள்ள அக்கவுண்ட்ஸ் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *