திருச்சி தமிழ் சங்கத்தின் நிறுவனர் துரைசாமிப்பிள்ளை அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “நிறுவனர் நாள் விருது” வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்க மன்ற கட்டிடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ் சங்க தலைவர் முனைவர் ‌அரங்கராஜன் தலைமை தாங்கினார். ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன், துணைத்தலைவர் வரதராசன், துணை அமைச்சர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ் சங்க அமைச்சர் பொறுப்பு உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் அருள் பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சங்கத் தலைவர் முனைவர் அரங்கராஜன் புலவர் கேசவன் அவர்களுக்கு நிறுவனர் நாள் விருது வழங்கி கவுரவித்தார். விழாவின் இறுதியாக முனைவர் சுஜாதா நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்