திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர குட்டிக்குடி திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து அம்மன் தேரில் வீதி உலா வந்தார் தேரானது தென்னூர் காவல்காரன் தெரு, அண்ணாநகர், லட்சுமி நகர், மல்லிகைபுரம் போன்ற முக்கிய வீதி வழியாக வந்தது.

தொடர்ந்து இன்று தென்னூர் பிடாரி மந்தையில் காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது..

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *