சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் நகை கடை ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி,சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட நான்கு கடைகளில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

6 கார்களில் வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் கடையில் உள்ளே நகைகள் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வரும் நிலையில் வெளியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது வருகின்றனர். இந்த நான்கு கடைகளில் நடத்தப்படும் சோதனைக்கும் சென்னையில் நகை கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *