திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ரமேஷ்பாபு பொறுப்பேற்றார். அதன்பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை மற்றும் குட்கா பொருட்கள், எண்ணெய் ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்.இதில்,பல கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றி அதை பதுக்கியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் கலப்பட எண்ணெய் நிறுவனங்களிலும் சோதனை நடத்திகலப்பட எண்ணெய் விற்பனையை தடுத்துள்ளார். இந்நிலையில், நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக புகார்கள் வந்ததின் எதிரொலியாக, இன்று காலை,பாலக்கரை வேர் ஹவுஸ் பகுதியில் செயல்பட்டுவரும் நெய் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ்பாபு அந்த குடோனில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நெய் பொருட்களை, ஆய்வுக்கு சாம்பிள் எடுத்து சென்றனர்

.இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு,புகார்கள் வந்ததன் அடிப்படையில் குடோனில் இருந்த நெய் சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு அனுப்பி, ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *