திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 35வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை – தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் நான்கு பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்‌‌.

இந்நிலையில் விசா முடிந்து தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உமா ரமணன் என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றய சம்பவம் சிறப்புமுகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீக்காயமடைந்த இலங்கைத் தமிழர் உமா ரமணன் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *