திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 4 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள்.

இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும், உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், பணியாளர்கள் உள்ளிட்ட 16 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் மேயர் அன்பழகன் வழங்கி அரசு பொருட்காட்சியில் மாநகராட்சி சார்பாக சிறப்பான முறையில் காட்சியரங்கம் ஏற்படுத்தியமைக்கான இரண்டு நபர்களுக்கு விருது வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மேயர் அன்பழகன் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் . ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்ரமணியன், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *