கொரோனா காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படம் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சையது முர்துஷ மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் தயார் நிலையில் உள்ளது.

இதேபோல் திருச்சி செந்தணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக கிருமிநாசினி சோப்பு மற்றும் கழிவறைகள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குவதற்காக ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர் மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் கணினி அறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்