திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாயொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 2 கோடி 70 லட்சம் மதிப்பில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு : தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தொழில் முதலீடுகள் தொடங்குவதற்கும் தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார். அண்ணாமலை எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால் அவரால் கட்சி நடத்த முடியாது – அண்ணாமலை மட்டுமல்ல யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கம் உள்ளனர். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது – ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிக்கு வந்து விடும்.

திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது – புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே 90 கோடி என்று நினைக்கப்பட்ட நிலையில் தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சியின் முகம் மாறும் – திருச்சி மாவட்டத்தில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும். தனியார் நிறுவனம் வாயிலாக திருச்சியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – முதலாவதாக கோவை மாநகருக்கு கொண்டு பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன படிப்படியாக கொண்டு வரப்படும்.

மலைக்கோட்டை – வயலூர் – ஸ்ரீரங்கம் – சமயபுரம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் எடுத்துக்கூற உள்ளோம். 2.80 லட்சம் கொடுத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்பதால் மண் பரிசோதனை உள்ளிட்ட எல்லா பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு நடைபெறும். பால் விலை,பஸ் கட்டண உயர்வு போன்றவை அந்தந்த காலகட்டங்களில் தகுந்தாற்போல் உயர்வது இயல்பான விஷயம் – அதை நாங்கள் தினிக்கவில்லை. ஒரு நிமிடத்தில் 300 பேருந்துகள் நிற்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் – அனைத்து வசதிகளும் திருச்சியில் கொண்டுவரக்கூடிய பேருந்து நிலையத்தில் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்