திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தின் நடுவே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்ததார். இந்நிலையில் அந்த வழியாக நடந்து சென்ற சிலர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இருந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தில் நடந்து வந்தபோது ரயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *