திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே வாழையூர் ஊராட்சியில் அமைந்துள்ள  ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கரும்பாயிரம் சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது.மே 22ம் தேதி புனித நீர் கொண்டு வருதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு முதல் கால யாக பூஜையுடன் யாக வேள்வி தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. ஆறு கால யாக வேள்வி பூஜைகளுக்கு பிறகு மஹா பூர்ணாஹூதியும் , தொடர்ந்து யாக சாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதனையடுத்து அய்யனார் கரும்பாயிரம் சுவாமி கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *