திருச்சி மாநகரின் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரின் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை திருச்சி ஏர்போர்ட் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் நிலையத்தில் பயணிகள் மற்றும் விஐபிகள் வருகை மற்றும் சோதனை வழி, பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்யும் கருவி, பார்வையாளர்கள் கூட்டம்,

விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள், விமானங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் கண்ட்ரோல் ரூம் ஆகியவற்றின் பாதுகாப்புகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு துனண கமிஷனர் சக்திவேல், பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் ஏர்போர்ட் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்