சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் 04.30 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் த/பெ, ரெய்னா முகமது‌ என போலி பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குடியேற்ற தணிக்கை பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலியான பெயர் மற்றும் தந்தை பெயரை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு துபாய் செல்ல இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவரது உண்மையான பெயர் முஜிபூர் ரகுமான், த/பெ அப்துல் காதர், சல்லி மலை, ராமநாதபுரம், மாவட்டம் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் போலி பாஸ் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முயன்ற வாலிபர் மீது அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *