திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லுவதற்காக வந்த பயணிகளில் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்ததில். ரூபாய் 66 லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சியை சேர்ந்த முகமது வயது 46 என்பதும், இந்த வெளிநாட்டு கரன்சிகளுக்கான போதிய ஆவணங்கள் முகமதுவிடம் இல்லாததால் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *